தாலி கட்டும் நேரத்தில் கரண்ட் கட்: திருமண வீட்டில் நடந்த களேபரம்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்விப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், சரியாக தாலி கட்டும் நேரத்தில் மின்சாரம் தடைபட, தவறான மணமகள்களுக்கு தாலி கட்டிவிட்டார்கள் மாப்பிள்ளைகள்.
மணப்பெண்கள் இருவரும் ஒரே மாதிரி சிவப்பு நிற புடவை கட்டியிருக்க, இருவரும் முக்காடும் போட்டிருக்க, மணமகன்களும் முகத்தின் முன் பூக்களால் ஆன திரை ஒன்றை போட்டிருக்க, மொத்தத்தில் ஜோடிகள் மாறிவிட்டன.
பின்னர்தான் இந்த உண்மை தெரியவர, திருமண வீடு பரபரப்பாகிவிட்டிருக்கிறது.
பிறகு தவறு சரி செய்யப்பட்டுவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் அந்த இரண்டு ஜோடிகளுக்கும் மின் தடையால் தங்கள் திருமண நாளில் ஏற்பட்ட குழப்பம் குறித்த நினைவுகள் மனதிலிருந்து அகலாது என்பது மட்டும் உண்மை!