விசா தொடர்பில் ஒரு நாட்டு மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பிரான்ஸ் அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தி
மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்திய மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பிரான்ஸ் விசாக்களை வழங்கத் துவங்கியுள்ளது. இந்திய மாணவர்களும் ஆய்வாளர்களும் மீண்டும் பிரான்ஸ் செல்வதற்கான விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு விசா தொடர்பான விண்ணப்பங்களை வழங்குவதை நிறுத்திவைத்திருந்த பிரான்ஸ், மீண்டும் விசா தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளது.
ஏப்ரல் 27 முதல் விசா வழங்கல் நிறுத்தப்பட்டிருந்ததால், ஏராளம் மாணவர்களும் ஆய்வாளர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போயிருந்த நிலையில், இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
I’m glad to announce that all student, researcher and "Talent passport" category applicants from India can now apply for a visa to travel to France. 🇮🇳🎓✈️
— Emmanuel Lenain (@FranceinIndia) July 23, 2021
Link : https://t.co/mtsrlnMOAc
அத்துடன், இந்தியா முதலான நாடுகள் பிரான்சின் சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் பிரான்ஸ் வர கட்டுப்பாடுகளும் நெகிழ்த்தப்பட்டுள்ளன.
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் இனி தாங்கள் பிரான்ஸ் வருவதற்கான அத்தியாவசியமான காரணம் எதையும் தெரிவிக்கவேண்டியதில்லை.
ஆனால், அவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரத்தை சமர்ப்பிப்பதுடன், பிரான்ஸ் வந்ததும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை அங்கீகரிப்பதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.