கொடூரம்... இளம் பெண்ணை அடித்து கொன்று பாலத்தில் தொங்க விட்ட குடும்பத்தினர்..! என்ன நடந்தது? தாய் பகீர் தகவல்
இந்தியாவில் 17 வயது இளம் பெண் குடும்பத்தினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் Deoria மாவட்டத்தில் உள்ள Savreji Kharf கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான நேஹா பாஸ்வான் என்ற இளம் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கொல்லப்பட்ட நேஹாவின் தாய் சகுந்தலா தேவி பாஸ்வான் கூறியதாவது, சம்பவத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்த நேஹா, மாலையில் ஜீன்ஸ், டாப் அணிந்து பூஜை செய்தார்.
இதன் போது ஜீன்ஸ் அணிந்ததற்கு அவரது தாத்தா, பாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஜீன்ஸ் அணிவதற்கு தான் தயாரிக்கப்பட்டது, நான் போடுவேன் என கூறினார்.
வாக்குவாதம் முற்றி வன்முறை ஏற்பட்டது, தாத்தா, பாட்டி உட்பட குடும்பத்தினர் நேஹாவை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
அதில் அவர் மயங்கி கீழே சரிந்தார், பின் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதாக அவர்கள் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றனர், உடனே நான் எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பினேன், ஆனால், நேஹா மருத்துவமனையில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த நாள் காலை, பாலத்தில் ஒரு பெண் சடலம் தொங்குவதாக தெரியவந்தது, சம்பவயிடத்திற்கு சென்ற விசாரித்த போது அது நேஹாவின் சடலம் என தெரியவந்தது என சகுந்தலா தேவி கூறினார்.
நேஹாவின் தாத்தா, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட 10 பேர் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாத்தா, பாட்டி, மாமா மற்றும் ஆட்டோ டிரைவர் என நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மற்ற குற்றவாளிகளை தேடி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.