இலங்கை சென்ற இந்திய அமைச்சர்.. ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு எதிராக வியூகமா?
23 இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகளின் 23-வது கொழும்பு மாநாட்டில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
ஆதிக்கம் செலுத்தும் சீனா
இந்திய பெருங்கடல் மட்டும் பதற்றம் குறைந்த இடமாக இருந்து வருகிறது. ஆனால், அங்கேயும் சீனா ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. அதனுடைய விரிவாக்கத்தை ஏற்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது, மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இதற்கான வழியாக கூட இருக்கலாம். வங்கதேசத்தில் கால் பதித்துள்ள சீனா, தற்போது இலங்கையில் காலனி நாடாக உருமாறி வருகிறது.
23 இந்தியப் பெருங்கடல் நாடுகள் கூட்டமைப்பு
கடந்த 1997 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது.
இந்த கூட்டமைப்பில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமோரோஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மலேசியா, மடகாஸ்கர், மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமன், சீஷெல்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், சோமாலியா, மாலத்தீவுகள் மற்றும் ஏமன் ஆகிய 23 நாடுகள் உள்ளன.
23 -வது மாநாடு
23 இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகள் கூட்டமைப்பின் 23 -வது மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டமைப்பின் தலைமை பொறுப்பில் இலங்கை இருப்பதால், இந்த ஆண்டு கூட்டமைப்பு மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது.
இந்திய அமைச்சர்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பதால், இலங்கை செல்லவிருந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் பயணம் ரத்தானது.
இதனைத்தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார்.
மேலும், இந்த பயணத்தின் போது, இலங்கையில் இருக்கும் தமிழர் தாயக நிலப்பகுதியான திருகோணமலைக்க்கும் செல்கிறார். அந்த பகுதியில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ஈழத்தமிழர் சார்ந்த அரசியல் சந்திப்புகளில் கலந்து கொள்ள மாட்டார் என வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளிவந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |