தமிழகத்தில் யாரும் செல்ல அனுமதி இல்லாத கிராமம்.., எங்கு உள்ளது தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முதன்மையான மற்றும் சிறப்புவாய்ந்த மாநிலம்.
இங்கு நவீன வளர்ச்சி இருந்தாலும், அதே நேரத்தில் பல வித்தியாசமான மற்றும் தனித்துவமான இடங்களும் உள்ளன.
அந்தவகையில், தமிழகத்தில் யாரும் செல்ல அனுமதி இல்லாத கிராமம் பற்றி பார்க்கலாம்.
அதன்படி, தெங்குமரஹடா கிராமம் நீலகிரி மலைத்தொடரின் அருகில், அடர்ந்த காடுகளுக்குள் அமைந்துள்ளது.

அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழல் காரணமாக இது மிகவும் பிரபலமானது.
உயரமான இடங்களில் இருந்து பார்க்கும்போது, இந்த கிராமம் காடுகளுக்குள் மறைந்திருப்பது போல தெரியும்.
இந்த கிராமம் கோத்தகிரி வட்டத்தில் இருந்தாலும், வழக்கமான மலைப்பாதைகள் மூலம் செல்ல முடியாது.
ஈரோடு மாவட்டம் வழியாக சாலை மூலம் மட்டுமே செல்ல முடியும். அதிலும், கிராமத்திற்குள் செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி அவசியம்.
யானைகள், புலிகள் போன்ற காட்டு விலங்குகள் அதிகமாகச் சுற்றித் திரிகின்றன. அதனால் பாதுகாப்பு காரணமாகவும், சூழலியல் பாதுகாப்புக்காகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதிகமான மக்கள் வந்தால் காடு பாதிக்கப்படும், விலங்குகளின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்படும்.
குறிப்பாக குப்பை வீச்சு மற்றும் சத்தம் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க இந்த கட்டுப்பாடுகள் உதவுகின்றன.
இதனால், தெங்குமரஹடா தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனித்துவமான, இயற்கை பாதுகாப்பு மிகுந்த கிராமமாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |