ஜேர்மன் பயணம் குறித்து வெளியாகியுள்ள சமீபத்தைய செய்தி
ஜேர்மனி தனது கொரோனா அபாய நாடுகள் பட்டியலிலிருந்து அமெரிக்கா, கனடா முதலான நாடுகளை நீக்கியுள்ளதாக ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அத்துடன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் நாட்டின் சில பகுதிகளும் இனி அபாய நாடுகளாக கருதப்படாது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை தனது கொரோனா அபாய நாடுகள் பட்டியலிலிருந்து ஜேர்மனி நீக்கியுள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது 19 நாடுகள் இனி அபாய நாடுகளாக கருதப்படாது என்று Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நாடுகளாவான, அர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா, கனடா, சைப்ரஸ், கொசோவா, லெபனான், மால்டோவா, மாண்டினெக்ரோ, வடக்கு மாசிடோனியா, செர்பியா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளாகும்.
அத்துடன், போர்ச்சுகல், நார்வே, குரோவேஷியா, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின்
சில பகுதிகளும் இனி அபாய பகுதிகளாக ஜேர்மனியால் கருதப்படாது.
இந்த அறிவிப்பு, இம்மாதம் (ஜூன்) 13ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது.