உடல் நலமில்லாமல் இருந்த மகனை அடித்தே கொன்ற தாய்: தந்தைக்கு கிடைத்துள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
தான் பெற்ற மகனை அடித்தே கொன்ற தாய் ஒருவர் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடிவதற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் விடுதலையான செய்தி அறிந்த அந்த சிறுவனின் தந்தை, தான் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் Fife என்ற இடத்தைச் சேர்ந்த Mikaeel Kular என்ற மூன்று வயது சிறுவன் திடீரென ஒரு நாள் மாயமானான். பொலிசாருடன் இனைந்து உள்ளூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் Mikaeelஐ தேடும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால், Kirkcaldy என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டின் பின்னால் ஒரு சூட்கேசுக்குள் உயிரற்ற சடலமாகத்தான் அவனைக் கண்டுபிடிக்க முடிந்தது.
அந்த வீடு Mikaeelஇன் தாயாகிய Rosdeep Adekoyaவின் (41) சகோதரியின் வீடு. குழந்தையின் உடலில் 40 காயங்கள் இருந்ததைக் கண்ட பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர். பொலிசார் முறைப்படி விசாரிக்க, Mikaeelஐ அடிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவன் இறந்துபோனதாகவும், அது தற்செயலாக நிகழ்ந்தது என்றும், தான் பயந்துபோனதாகவும் Adekoya கூற, உண்மை வெளியானது.
உடல் நலமில்லாமல் இருந்த தன் மகனை அடித்துக் கொன்றுவிட்டு, கொலையை மறைக்க நாடகமாடிய Adekoyaவுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அவரது தண்டனைக்காலம் முடியும் முன்னரே, ஏழு ஆண்டுக்கும் குறைவாகவே அவர் சிறைத்தண்டனை அனுபவித்துள்ள நிலையில், திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார் Adekoya. இந்த செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்ட Mikaeelஇன் தந்தையான Zahid Saeed, தான் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Adekoya விடுவிக்கப்படும் முன் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு ஏற்கனவே தான் கேட்டுக்கொண்டும், ஊடகங்கள் வாயிலாகவே தான் அவர் விடுவிக்கப்பட்டதை அறிந்துகொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Zahid, தான் கடும் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அநியாயமாக கொல்லப்பட்ட தன் மகனை சட்டம் கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ள Zahid, நீதித்துறை தங்கள் இருவரையும் கைவிட்டுவிட்டதாகவும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார்.