ஜேர்மனியிலிருந்து அமெரிக்க போர் விமானத்தில் வந்திறங்கிய பொருள்: பெருமூச்சு விட்ட பெற்றோர்
அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜேர்மனியிலிருந்து கொண்டு வந்த ஒரு பொருளைக் கண்டு அமெரிக்கப் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சு விட்ட சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.
அந்த பொருள் குழந்தைகளுக்கான பால் பவுடர்!
அதாவது, அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பில் நான்கே நான்கு நிறுவனங்கள்தான் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் முக்கியமான குழந்தைகள் உணவு தயாரிப்பு நிறுவனமான Abbott Nutrition என்ற நிறுவன தயாரிப்பான குழந்தைகள் உணவை உண்ட குழந்தைகள் நான்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. அந்த உணவில் நோய்க்கிருமிகள் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளில் இரண்டு உயிரிழந்துவிட, அந்த குழந்தைகள் உணவு தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. அத்துடன் சில சட்டச் சிக்கல்களும் இணைந்துகொள்ள, நாடு முழுவதும் குழந்தைகளுக்கான உணவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
BREAKING: The first flight of "Operation Fly Formula" carrying more than 70,000 lbs. of baby formula landed in Indiana. https://t.co/mG4EpoTzRc pic.twitter.com/kFuzi7o3D5
— ABC News (@ABC) May 22, 2022
பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். சிலர் பசு மாட்டின் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்க, சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.
இந்நிலையில்தான் ஒருவழியாக ஐரோப்பாவிலிருந்து குழந்தைகளுக்கான பால் பவுடர் முதலான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா முடிவு செய்தது.
அவ்வகையில், ஜேர்மனியின் Ramstein விமான தளத்திலிருந்து 75,000 பவுண்டுகள் எடையுடைய குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களுடன் அமெரிக்க போர் விமானம் ஒன்று நேற்று அமெரிக்காவிலுள்ள இண்டியானாவை வந்தடைந்தது.
அந்த விமானத்தில், அரை மில்லியன் 8-அவுன்ஸ் போத்தல்களுக்கு இணையான குழந்தைகளுக்கான பால் பவுடர் உள்ளது.
ஆகவேதான், அந்த விமானம் அமெரிக்கா வந்தடைந்ததையடுத்து சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்கள்.
வரும் நாட்களில் மேலும் அதிக குழந்தைகள் உணவு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளது.