ஐரோப்பாவிலேயே பணக்கார நாடு... வெள்ளத்தை எதிர்கொள்ள தவறியது ஏன்?: ஜேர்மன் மக்கள் கேள்வி
ஜேர்மனியில் பெய்த மழை, அதைத் தொடர்ந்து உருவான பெருவெள்ளம், நிலச்சரிவு என, இயற்கைச் சீற்றம் கம்பீரமாக நின்ற நாட்டை நிலைகுலையச் செய்ய, 170 பேர் பலியாக இன்னமும் ஆயிரக்கணக்கானோரை காணாமல் திணறி வருகிறது ஜேர்மனி.
செப்டம்பரில் ஜேர்மனியில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ஐரோப்பாவிலேயே பணக்கார நாடான ஜேர்மனி வெள்ளத்தை எதிர்கொள்ள தடுமாறியது ஏன் என, உறவுகளை இழந்த வேதனையிலும் கோபத்திலும் இருக்கும் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.
பெடரல் அரசும், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என மூன்றில் இரண்டு பங்கு ஜேர்மானியர்கள் கருதுவதாக இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.