ஜேர்மனியில் உக்ரைன் குழந்தைகள் படிக்கும் நர்சரி பள்ளிக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு
ஜேர்மன் நகரமொன்றில் உக்ரைன் குழந்தைகள் படிக்கும் நர்சரி பள்ளி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அங்கு யாருமில்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நகரமொன்றில் உக்ரைன் குழந்தைகள் படிக்கும் நர்சரி பள்ளி ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Leipzig நகரிலுள்ள அந்த நர்சரி பள்ளிக்கு, சென்ற வார இறுதியில் தீவைக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அங்கு யாருமில்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
Shutterstock/MAYA LAB
மேலும், தீ பரவாததால் பெருமளவில் அந்த கட்டிடமும் சேதமடைவதிலிருந்து தப்பியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை இன்னமும் கணக்கிடவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த தீவைப்பு முயற்சி, அரசியல் ரீதியானதாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதற்கிடையில், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது, அதுவும் குறிப்பாக தங்கள் வீடுகளை இழந்துள்ள பிள்ளைகளை தாக்குவது மிகவும் இழிவான செயல் என முன்னணி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Norbert Röttgen கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்த தீவைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.