ஜேர்மனியின் மூன்றாவது அலை உடைந்துபோனதுபோல் தோன்றுகிறது... சுகாதாரத்துறை அமைச்சர்
ஜேர்மனியின் மூன்றாவது அலை உடைந்துபோனதுபோல் தோன்றுகிறது என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று, பெர்லினில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn, கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது.
எல்லா இடங்களிலும் ஒரே அளவில் குறையவில்லை என்றாலும், அது குறைகின்றது என்றார். இரண்டு வாரங்களுக்கு முன் ஜேர்மனியில் நாளொன்றிற்கு 27,543 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றுடனான 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை 18,485 ஆக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் இப்போது உடனே கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது கொரோனா வைரஸுக்கு உதவுவது போன்றது என்றார் அவர்.
இதுவரை கஷ்டப்பட்டு எதை அடைந்தோமோ அதை விளையாட்டாக கருதாமல் கவனமாக இருப்பதே இப்போதைய சூழலில் முக்கியமானது என்றார் Spahn.