கொரோனாவின் மூன்றாவது அலை இன்னும் முடியவில்லை... எச்சரிக்கும் ஜேர்மன் அமைச்சர்
ஜேர்மனியின் பல பாகங்களில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனாலும், மாகாணங்கள் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த அவசரப்படவேண்டாம் என்கிறார் ஜேர்மன் சுகாதாரத்துரை அமைச்சர்.
உணவகங்கள், உடற்பயிற்சிக்கூடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் படிப்படியாகத்தான் எடுக்கப்படவேண்டும் என்கிறார் ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn.
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் விடயத்தில் கூட எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் அவர்.
தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான பல விடயங்களைப் பார்க்கிறோம், என்றாலும், நாம் இன்னும் கொரோனாவின் மூன்றாவது அலையில்தான் உள்ளோம் என்கிறார் அவர்.
கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை குறைவதென்னவோ உண்மைதான், ஆனால், அவை போதுமான
அளவுக்கு குறையவில்லை, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் இன்னமும்
நிரம்பி வழியத்தான் செய்கின்றன, ஆகவே, நம்பிக்கையுடன் கூடவே எச்சரிக்கையும்
இப்போது தேவைப்படுகிறது என்கிறார் Jens Spahn..