தனிமையை நாடிச் செல்ல விரும்பும் வில்லியம் கேட் குடும்பம்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட செய்தி பிரித்தானியர்களையும் அவரது நலம் விரும்பிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் தன் குடும்பத்துடன் தனிமையை நாடிச் செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வெளியான கவலையையளிக்கும் செய்திகள்
இளவரசர் பிலிப், எலிசபெத் மகாராணியார் மரணச் செய்திகள், மன்னர் சார்லஸ், இளவரசி கேட் உடல் நல பாதிப்பு, என பிரித்தானிய ராஜ குடும்பம் தொடர்ந்து துயரச் செய்திகளைக் கேட்டுவருகிறது.
பொதுவாக ஈஸ்டர் பண்டிகை மேலை நாடுகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ராஜ குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு வரையிலான பல சோகங்களை சந்தித்துள்ள ராஜ குடும்பம், ஈஸ்டர் பண்டிகையை இணைந்துகொண்டாடும் மன நிலைமையில் இல்லைபோல் தோன்றுகிறது.
குறிப்பாக, சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்ட இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரை அந்த செய்தி எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை நிச்சயம் கணிக்கமுடியும்.
இந்நிலையில், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர், ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட எங்காவது தூரமாகச் செல்ல விரும்புவதாக தம்பதியரின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வில்லியம், கேட், அவர்களுடைய மூன்று பிள்ளைகள் என ஐந்துபேரும் மட்டும் எங்காவது சென்று தனிமையில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட விரும்புவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |