பிரித்தானியாவில் மக்கள் கண்முன்னே தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு
பிரித்தானியாவில் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண் முன்னே பெண் ஒருவர் எரிபொருளை மேலே ஊற்றி தீவைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கு யார்க்ஷையரிலுள்ள Bradford பகுதியில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது. நேற்று காலை வங்கி விடுமுறையை ஒட்டி கோல்ப் விளையாடுவதற்காக கோல்ப் மைதானம் ஒன்றில் மக்கள் கூடியிருந்தார்கள்.
அப்போது காலை 9.15 மணியளவில், ஒரு பெண் எரிபொருள் எதையோ தன் மேலே ஊற்றிக்கொண்டு தீவைக்க, பதறிப்போய் தீயணைப்புத் துறையினரையும் மருத்துவ உதவிக்குழுவினரையும் அழைத்துள்ளனர் மக்கள்.
ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வரும்போது, அந்த பெண் உயிருடன் இல்லை.
அந்த பெண் யார், எதற்காக இப்படி செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கண் முன்னே பெண் ஒருவர் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதை பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.