திருமணத்தில் நடனமாடி கொண்டிருந்த இளம்பெண்! திடீர் உயிரிழப்பு
பொதுவாக திருமணம் என்று வந்தாலே பாட்டு, நடனம் என்று ஒரே குத்தும் கும்மாளமாக இருக்கும்.
எல்லோரும் அந்த நாள் அன்று மிகவும் சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
இருப்பினும் சில திருமண நிகழ்வில் சோக சம்பவங்களும் இடம்பெறும்.
அந்தவகையில் தெலுங்கானாவில் திருமண நிகழ்வன்று ஒரு சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திடீர் உயிரிழப்பு
30 வயதாகிய பெண் ஒருவர்,கம்மம் எனும் கிராமத்தின் அருகே சீதமபேட் எனும் ஒரு ஊரில் வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த வேளையில் திடீரெனெ உயிரிழந்தார். தனது உறவினரின் வைபவத்திற்கு வந்த இன்னொரு பெண்ணும் இவருடன் சேர்நது நடனமாடிக்கொண்டிருந்தார்.
திருமணம் முடியவிருந்த தருவாயில்,ராணி எனும் பெயருடைய இந்த பெண் நடனமாடி முடித்து மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்த பின் தடுமாறி தரையில் வீழ்ந்துள்ளார்.
உடனே அவரின் உறவினர்கள் அவரை அருகிலிருந்த உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவரை அழைத்து சென்று கொண்டிருந்த வேளையிலே அவரது உயிரிழந்துள்ளார்.
மருத்துவர்கள் இவரது மரணத்திற்கான துல்லியமான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என கருத்து வெளியிட்டுள்ளனர்.