மீண்டும் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை: பல மில்லியன் மதிப்புடைய நகைகள் மாயம்
பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து பல மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மீண்டும் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்தில் சில மாதங்களுக்கு முன் கொள்ளையர்கள் சிலர் 88 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், வடகிழக்கு பிரான்சிலுள்ள Wingen-sur-Moder என்னுமிடத்தில் அமைந்துள்ள The Lalique Museum என்னும் அருங்காட்சியகத்தில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முகமூடி அணிந்த சிலர் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து பல மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அருங்காட்சியகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
பொலிசார் அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |