முதல் மனைவி தான் போயிட்டா... நீயும் போயிடாதனு கெஞ்சினேன்! 2-வது மனைவியை கொலை செய்த கணவனின் வாக்குமூலம்
தமிழகத்தில், மனைவி தன்னுடைய பழைய காதலனை மறக்காததால், அவரை துடி துடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி. 20 வயதான இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
கண்ணனுக்கு இது 2-வது திருமணம், முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கஸ்தூரியை அவர் திருமணம் செய்துள்ளார். ஆனால், கஸ்தூரிக்கோ இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை.
இதன் காரணமாக திருமணத்திற்கு பின் கஸ்தூரி மற்றும் கண்ணனுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இப்படி பிரச்சனை ஏற்படும் போது எல்லாம், கஸ்தூரி கோபித்துக் கொண்டு கீழப்புதூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கஸ்தூரி கோபித்துக் கொண்டு தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரை சமாதானம் செய்து அழைத்து வர பாட்டி கண்ணன் பாட்டி வீட்டிற்கு செல்ல, ஆனால், கஸ்தூரி வேலைக்கு போயிருப்பதாகவும், வீட்டிற்கு திரும்பி வந்ததும், அனுப்பி வைப்பதாகவும் கஸ்தூரியின் பாட்டி .கூறியுள்ளார்.
இதை கேட்டதும், கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்த கண்ணன், பிறகு திடீரென இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, புளியரை சாலையில் போய் நின்றுள்ளார்.
ஏனெனில், அந்த வழியாக தான் கஸ்தூரி வீட்டிற்கு திரும்பி வருவார் என்பதால், கண்ணன் அங்கிருக்கும் லொரிகளுக்கிடையே மறைந்து நின்றுள்ளார்.
எதிர்பார்த்தபடியே கஸ்தூரி வந்து கொண்டிருக்க, அப்போது, இருசக்கர வாகனத்தை அவர் மீது மோதிவிட்டு, கீழே தள்ளினார் கண்ணன்.. இதில் நிலைகுலைந்து கீழே கஸ்தூரி விழவும், அதற்குள் பைக்கில் இருந்து ஒரு பெரிய அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டியதால், கஸ்தூரி அந்த இடத்திலே துடி துடித்து இறந்தார்.
அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிவிட, இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த பொலிசார், கண்ணன் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடுவதற்குள் மடக்கி பிடித்துவிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்னர், கஸ்தூரி, தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்துள்ளார். அந்த இளைஞருக்கு திருமணம் ஆகிவிட்டது.
இருப்பினும், அவரையே நினைத்து கொண்டிருந்தார். அவரால் மறக்க முடியவில்லை.. இந்த சமயத்தில்தான் என்னுடன் திருமணம் நடந்தது. அதன் பின்பு தான் இந்த திருமணத்தில், அவருக்கு இஷ்டம் இல்லை என்பது தெரிந்தது.
ஒரு கட்டத்தில் எங்கள் பிரச்சனையின் போது, கஸ்தூரி, நான் என்னுடைய பழைய காதலனுடன் வாழப்போவதாக கூறினார். நான் அவரிடம், ஏற்கனவே என் மனைவி பிரிந்து போய்விட்டதால், நீயும் என்னை விட்டு போய் விடாதேன்னு கெஞ்சினேன்.
ஆனால் கஸ்தூரி முரண்டுபிடித்தார். இந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.