இந்திய கிரிக்கெட் அணியில் பிளவா.. டி-20 கேப்டன் பொறுப்புகளை ரோகித்திடம் பிரித்து கொடுக்க முடிவா? பிசிசிஐ முக்கிய தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புகளை பிரித்து வழங்கப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட, ஒரு நாள் மற்றும் டி-20 என மூன்றுக்கும் கோலி தான் கேப்டனாக இருக்கிறார்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்சி பொறுப்புகள் பிரித்து கொடுக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் கவனம் செலுத்துவதற்காக கோலி, டி20 உலகக் கோப்பைக்கு துணை கேப்டன் ரோகித்துக்கு வழிவிட உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், தற்போது வரை இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்று வருவதால், கேப்டன்சியில் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2019ல் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் மோசமாக தோற்ற பின், டெஸ்ட் போட்டிக்கு கோலியையும், ஒரு நாள் போட்டிக்கு ரோகித் சர்மாவையும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கருத்துக்கள் பரவின என்பது நினைவுக் கூரத்தக்கது.