இந்த 6 விஷயங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்! உஷாரா இருங்க
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது நம் சிறுநீரகம் தான். இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
சிறுநீரகங்களின் செயல்பாடு முடங்கும்போது வாழ்க்கையே முடங்கிவிடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.
ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிதாகும்.
அந்தவகையில் சிறுநீரை பாதிக்கும் விடயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டால் அதிலிருந்து எளியமுறையில் விடுபட முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சிறுநீரக பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணங்கள் உணவு சாப்பிடாமல் இருப்பது
நீங்கள் உணவு உண்ணாமல் இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று தருகிறது. இதே போன்று தொடர்ச்சியாக உணவு உண்ணாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் சிறுநீரகங்களை பாதித்து விடும்.
- வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துதல்கால், கை, தலை வலி போன்றவற்றிற்கு வலி நிவாரண மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர் சாப்பிட்டால் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது
- மது அருந்துவது சிறுநீரகங்களை பாதிக்கும். வெறும் வயிற்றில் மது அருந்துவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை சிறுநீரகத்தை பாதித்து விடும். உப்பு அதிகமாக சாப்பிடுதல்
- உணவில் அதிகமாக உப்பை சேர்த்து சாப்பிட்டால் அவை சிறு நீரகத்துக்கு அதிக வேலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
- இன்றைய காலத்தில் படிக்கும் இளைஞர்கள் முதல் பலரும் வேலை பளு காரணமாக போதிய அளவு தண்ணீரை அருந்துவது கிடையாது. போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
- சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தால் அவை சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் சிறுநீரகத்தில் கல்லை உருவாக்கும். அதுவே காலப்போக்கில் சிறுநீரகத்திலும் சிறுநீரக பையிலும் கிருமி தொற்றை ஏற்படுத்தி பிரச்சினையை உருவாக்கி சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதித்து விடும்.