காசியில் இந்த 5 பேரின் சடலங்களை எரிக்க அனுமதி இல்லை.., ஏன் தெரியுமா?
புனித தலங்களில் முதன்மையாக கருதப்படும் காசி முக்திக்கு பெயர் பெற்றது.
காசிக்கு சென்றால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் வயதானவர்கள் காசிக்கு செல்வதை அதிகம் பார்த்திருப்போம்.
மேலும் இறந்தவர்களை காசியில் எரிப்பதன் மூலம் அவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் குறிப்பிட்ட 5 பேர்களின் சடலங்களை காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
1. சாதுக்கள்- சாதுக்களின் உடல்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகின்றன அல்லது தரையில் புதைக்கப்படுகின்றன. எரிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
2. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்- இந்த வயதுக்குள் இறந்த குழந்தைகள் தகனம் செய்யப்படுவதில்லை, ஏனெனில் அவற்றை கடவுளின் வடிவமாக கருதுகிறார்கள்.
3. கர்ப்பிணிப் பெண்கள்- கர்ப்பிணிப் பெண்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் வயிறு வெடிக்கக்கூடும். இதனால் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.
4. பாம்பு கடித்து இறந்தவர்கள்- பாம்பு கடித்த உடல்களில் மூளை 21 நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதால், அவற்றை தண்ணீரில் மிதக்க விட்டால் அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என நம்பப்படுகிறது. இதனால் இவர்களை இங்கே எரிக்காமல் தண்ணீரில் மிதக்கவிடப்படுவார்களாம்.
5. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்- இவர்களை தகனம் செய்வதன் மூலம், நோய் பரவும் என்பதால், அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |