மக்களே! பொரித்த உணவுகளை சாப்பிட்ட பின் மறக்கமால் இந்த விஷயங்களை பின்பற்றுங்க.. அவசியமாம்
Cholestrol
Weight Loss
By Kishanthini
பொதுவாக நம்மில் நிறைய பேர் வறுக்கப்பட்ட உணவுகளை விரும்பி சுவைப்பார்கள்.
பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். குறிப்பாக முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எண்ணெய் வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கமுடியாத பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் பால், டீ போன்றவற்றை சூடாக பருகுவதற்கு பதிலாக வெந்நீர் குடிப்பதே சிறந்தது. ஏனெனில் செரிமான அமைப்பை விரைவாக செயல்பட தூண்டுவதோடு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றது. உதவும். மேலும் வெந்நீர் குடிப்பது சாப்பிடும் உணவில் உள்ள எண்ணெய் தன்மையை வெளியேற்றவும் உதவும்.
- வெந்நீர்னுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அது உடலில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பை விரைவாக அகற்ற துணைபுரியும். உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றுவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவும்.
- சாப்பிட்டு முடித்துவிட்டு வெந்நீர் பருகியதும் சிறிது தூரம் நடப்பதும் நல்லது. இது உடலும் விரைவாக உணவை ஜீரணிக்க வைப்பதற்கு இசைந்து கொடுக்கும். சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தால் உடல் இலகுவாகுவதை உணர்வீர்கள்.
- எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவது நல்லது. அது குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
- மதிய வேளையில் எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால், சிறிது நேரம் கழித்து பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது.
- எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த உணவு பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் என குளிர்ச்சியான எதையும் சாப்பிடக்கூடாது.
- எண்ணெய் உணவுகளை சாப்பிட்டதும் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் ஜீரணத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US