Amazon, Fed-Ex சரக்கு ரயில்களை கொள்ளையடித்த திருடர்கள்!
அமெரிக்காவில் Amazon, Fed-Ex சரக்கு ரயில்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் திருட்டு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. AFP-ன் அறிக்கையின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் ரயில்வேயில் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான ரயில் சரக்கு பெட்டிகள் திருடர்களால் உடைக்கப்படுகின்றன.
திருடர்கள் ஓன்லைனில் வாங்கப்படும் பேக்கேஜ்களை கொள்ளையடிக்க ரயில்களின் நிறுத்தங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு அவர்கள் ஆயிரக்கணக்கான வெற்றுப் பெட்டிகளையும் கிழிந்த பேக்கேஜ்களையும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
Amazon, Target, UPS மற்றும் FedEx போன்ற முக்கிய அமெரிக்க மெயில் ஆர்டர் மற்றும் கூரியர் நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் இந்த திருட்டுகளால் பாதிக்கப்படுகின்றன.
Keep hearing of train burglaries in LA on the scanner so went to #LincolnHeights to see it all. And… there’s looted packages as far as the eye can see. Amazon packages, @UPS boxes, unused Covid tests, fishing lures, epi pens. Cargo containers left busted open on trains. @CBSLA pic.twitter.com/JvNF4UVy2K
— John Schreiber (@johnschreiber) January 13, 2022
ஜனவரி 1 முதல் ஒவ்வொரு நாளும் 90-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் இவ்வாறு உடைத்து சூறையாடப்படுகினறன.
டிசம்பர் 2021-ன் பிற்பகுதியில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் அதிகரித்ததில் இருந்து இதுபோன்ற திருட்டு வழக்குகள் அதிகரித்துள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில், டிசம்பர் 2020 முதல் 160 சதவிகிதம் திருட்டு வழக்குகள் அதிகரித்துள்ளதாக ரயில் ஆபரேட்டர்கள் கூறுகினற்னர்.
அக்டோபர் 2021-ல் மட்டும், வழக்குகளின் அதிகரிப்பு 356 சதவிகிதமாக இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நீண்ட சரக்கு ரயில்கள் தண்டவாளத்தில் நிறுத்தப்படும் வரை திருடர்கள் காத்திருந்து, பின்னர் சரக்கு கன்டெய்னர்களில் ஏறி, அதன் பூட்டுகள் போல்ட் கட்டர்களின் உதவியுடன் எளிதில் உடைத்துவிடுவதாக கூறப்படுகினறன.
அறிக்கையின்படி, அவர்கள் எடுத்துச்செல்ல அல்லது மறுவிற்பனை செய்ய கடினமாக இருக்கும் பார்சல்களை, கோவிட்-19 சோதனைக் கருவிகள், தளபாடங்கள் அல்லது மருந்துகள் போன்ற மிகக் குறைந்த விலையில் இருக்கும் பொருட்களைத் தவிர்த்துவிடுகிறார்கள்.
Photo: AP
ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் ரயில் ஆபரேட்டர், யூனியன் பசிபிக் ஊழியர்கள் மீதான தாக்குதல் வழக்குகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், யூனியன் பசிபிக் அச்சுறுத்தலைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறிக்கையின்படி, ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிறுவனம் தங்கள் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தியுள்ளது. கான்வாய்களைக் கண்காணிக்க அதிக பாதுகாப்புப் பணியாளர்களையும் நியமித்துள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும், அத்துமீறி நுழைந்து நாசப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால், அதன் தாக்கம் மைதானத்தில் பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் கைது செய்யப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள் சிறிய குற்றங்களாக குறைக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவர்கள் விடுதலையாகிவிடுவார்கள் என்றும், அவர்கள் அதைப் பற்றி பெருமையாகவும் பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இரயில் ஆபரேட்டரான யூனியன் பசிபிக், டிசம்பர் 2020 இன் இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி அட்டர்னி அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதாகவும், இதுபோன்ற குற்றங்களுக்கு 2020-ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மென்மைக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
யூனியன் பசிபிக்கை பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டில் இதுபோன்ற திருட்டுகளால் ஏற்பட்ட சேதங்கள் சுமார் 5 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கும் என்று அறிக்கை கூறியது.
இதில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் இழப்புகள் அடங்காது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.