இதை செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்! பிரித்தானியர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்
தடுப்பூசி போடாதவர்கள் கட்டிப்பிடிப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுமாறு பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அறிவுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் திங்கள்கிழமை முதல் ‘எச்சரிக்கையுடன் கட்டிப்பிடிப்பது’ மீண்டும் அனுமதிக்கப்படும் என்று பிரதமர் கூறியதையடுத்து, சுகாதார செயலாளர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
மே 17 அன்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை அடுத்த கட்டமாக தளர்த்துவதின் ஒரு பகுதியாக, மக்கள் ஆறு பேர் கொண்ட குழுவாக சந்திக்கும் போது, அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவர்கள் கட்டிப்பிடிப்பதா அல்லது கைகுலுக்குவதா என்பதை அவர்களே தீர்மானிக்கலாம்.
தடுப்பூசி போடாதவர்கள் இருவர் கட்டிப்பிடித்தால், கண்டிப்பாக அவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகம்.
‘எச்சரிக்கையுடன் கட்டிப்பிடிப்பது’என்பது மக்களின் சூழ்நிலைகளைப் பொறுத்தது.
பிரித்தானியா மக்கள் தற்போது வரை மிகவும் புத்திசாலிதனமாக செயல்பட்டு வருகின்றனர்.
தடுப்பூசி போட்டவர் தடுப்பூசி போடாதவர் அல்லது தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும் போது தடுப்பூசி போட்ட இருவர் சந்திப்பது, மிக அருகில் இருப்பது பாதுகாப்பானது என பிரித்தானியா சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் குறிப்பிட்டார்.