அமெரிக்காவில் ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ள மூன்றாவது இந்திய இளைஞர்
அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ள இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இந்திய தூதரகம் தெரிவித்துள்ள துயரச் செய்தி
நியூயார்க்கிலுள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், Ohio மாகாணத்தில், ஷ்ரியாஸ் ரெட்டி (Shreyas Reddy Benigeri, 18) என்னும் இந்திய வம்சாவளி மாணவர் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Deeply saddened by the unfortunate demise of Mr. Shreyas Reddy Benigeri, a student of Indian origin in Ohio. Police investigation is underway. At this stage, foul play is not suspected.
— India in New York (@IndiainNewYork) February 1, 2024
The Consulate continues to remain in touch with the family and is extending all possible…
இப்போதைக்கு அவரது மரணத்தில் சந்தேகம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மாணவரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை தூதரக செய்துவருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது சம்பவம்
ஞாயிற்றுக்கிழமையன்று, இண்டியானாவிலுள்ள Purdue பல்கலைக்கழகத்தில் நீல் ஆச்சார்யா என்னும் இந்திய மாணவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், விவேக் சைனி என்னும் இந்திய இளைஞர், ஜூலியன் பால்க்னர் என்னும் வீடற்ற நபரால் அடித்துக்கொல்லப்பட்டார்.
தற்போது, ஷ்ரியாஸ் ரெட்டி மரணமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ள இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |