சீனா உயிரியல் ஆயுதங்களுடன் மூன்றாம் உலகப்போருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது: சிக்கிய ரகசிய ஆவணம்
சீனா, உயிரியல் மற்றும் மரபியல் ஆயுதங்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளாகவே மூன்றாம் உலகப்போருக்காக தயாராகிக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
2015ஆம் ஆண்டு, சீனா சார்ஸ் கொரோனா வைரஸ்களை ஆயுதமாக பயன்படுத்துவது தொடர்பாக திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், கொரோனாவைப் பரப்பியதன் பின்னணியில் சீனா இருக்கலாம் என்ற புதிய அச்சம் உருவாகியுள்ளது.
சிக்கிய ஆவணம் ஒன்றில், சீன இராணுவ அறிவியலாளர்களும் மருத்துவர்களும் கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து சோதித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரியல் ஆயுதங்கள் கொண்டு நடத்தப்படும் போர் குறித்து விரிவாக அந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளதுடன், அப்படி ஒரு நோய்க்கிருமியை ஆயுதமாக பயன்படுத்தினால், அதனால் எதிரி நாட்டில் நோயாளிகள் பெருகி அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை உருவாகும் என்றும், அதனால், எதிரியின் சுகாதார அமைப்பே நிலைகுலையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அதிக அபாய ஆய்வகங்களில் பணியாற்றும் 18 பேர் எழுதியுள்ளதாக தெரிகிறது.
உளவுத்துறை அமைப்புகள் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியதாக சந்தேகிக்கிறார்கள். ஆனால், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த இரகசிய ஆவணம் வெளியாகியுள்ளதால், கொரோனாவைப் பரப்பியதன் பின்னணியில் சீனா இருக்கலாம் என்ற புதிய அச்சம் உருவாகியுள்ளது.