கொரோனாவிலே இந்த வகை கொரோனா வைரஸ் தான் மிகவும் ஆபத்தானது! கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்: முக்கிய தகவல்
இந்தியாவில் இருக்கும் புனே ஆராய்ச்சியாளர்கள், B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரசை கண்டுபிடித்துள்ளனர்,
சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கொரோன வைரஸ், இப்போது உலகின் சுமார் 280-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, கோடிக்கணக்கானோரின் உயிரை எடுத்துள்ளது.
ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை, விட இந்த கொரோனா வைரஸ் இப்போது ஒவ்வொரு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து, முன்பை விட தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும், அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா எனவும், இதேபோல், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020-ஆம் ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் புனேவில் இருக்கும் National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரசை கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியா மற்றும் பிரேசிலில் இருந்து வந்தவர்களிடம் இருந்து இந்த மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.1.28.2 மரபணு மாற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் எடை குறைதல், சுவாச குழாயிலேயே வைரசுகள் பல்கி பெருகி, நுரையீரல் புண்கள் உருவாகும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரசை போன்றது என்றும் ஆனால் ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட அபாயகரமானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.