இது ஆபத்தானது... பிரித்தானியா அமைச்சர் எச்சிரிக்கை
காலநிலை ஆர்வலர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவது ஆபத்தானது என பிரித்தானிாய போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Insulate Britain குழுவினர், வீட்டு வெப்ப உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலநிலை மாற்றத்திற்கு எதிராகவும், தங்களது கோரிகை்கை நிறைவேற்ற வலியுறுத்தியும் M25 சாலையை மறித்து Insulate Britain குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாரம் மூன்றாவது முறையாக M25 சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Insulate Britain குழுவினரின் சாலை மறியல் போராட்டம் ஆபத்தானது என பிரித்தானிாய போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
This is dangerous and counterproductive. We all agree that climate change must be tackled, but this sort of behaviour achieves nothing, puts drivers at risk and INCREASES pollution. I expect the police to take swift action to clear the roads. pic.twitter.com/8YqouvXKuw
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) September 17, 2021
இதுகுறித்து ஷாப்ஸ் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இது ஆபத்தானது மற்றும் எதிர்மறையானது.
காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் இந்த வகையான நடத்தையால் எதையும் அடைய முடியாது, இது ஓட்டுநர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் மாசுபாட்டை அதிகரிக்கிறது.
சாலைகளிலிருந்து போராட்டகாரர்களை அகற்ற காவல்துறை விரைவான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.