நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணம்! சீமான் பேட்டி
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், நேற்று ஏப்ரல் 17ம் திகதி அதிகாலை காலமானார்.
இதனையடுத்து, நேற்றே அவரது உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக் ஏப்ரல் 15ம் திகதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனால், நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமாக இருக்குமோ என வதந்திகள் பரவிய நிலையில் தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்பட்டதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 18 தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் தொடக்க நாள் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என கூறினார்.
நான் தடுப்பூசி போடவில்லை, விவேக் எனக்கு ரொம்ப உயிருக்கு இனிய நெருக்கமான உறவு, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன், எனக்கு அச்சம் இருந்தது உடனே நான் விசாரித்தேன்.
நான் விசாரித்த வரையில் அவர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி போட்டது காரணமில்லை.
அவருக்கு ஏற்கனவே அடைப்பு இருந்தது, அவர் உடல் பரிசோதனை செய்யாததால் இதயத்தில் அடைப்பு இருந்ததை கவனிக்கத் தவறிவிட்டார்.
LIVE தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் - தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு தற்போது நேரலையில் 18-04-2021 | தலைமையகம்(சென்னை) #TamilGenocideRemembranceMonth https://t.co/JlQenbe2hf
— சீமான் (@SeemanOfficial) April 18, 2021
மருத்துவர்கள் வட்டத்தில் விசாரித்த போதும் கொரோனா தடுப்பூசி போட்டது அவரது மரணத்திற்கு காரணமில்லை என கூறினர்.
அடைப்பு இருந்தது, ஒருவேளை ஊசி போட்டதால் அழுத்தம் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர, முழுக்க முழுக்க அதுவே காரணம் என நான் கருதவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.