இந்த பிரச்சனை உள்ளவர்கள் மறந்தும் கூட பூண்டை சாப்பிடாதீங்க! ஆபத்தை ஏற்படுத்துமாம்
பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
இருப்பினும் இதனை சிலர் எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது பூண்டை யாரொல்லாம் சாப்பிடகூடாது என்பதை பார்ப்போம்.
- கல்லீரல், குடல், வயிறு பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது. இதனால், குடலில் காயம் ஏற்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. உங்கள் கல்லீரலில் பூண்டில் உள்ள சில கூறுகள் வினைபுரியும். கல்லிரல் குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளுடன், இது சேர்ந்து கொண்டால் இது பிரச்சனையை அதிகரிக்கிறது.
- பூண்டு இரத்தத்தை மெலிதாகச் செய்கிறது. எனவே சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவர்களின் காயம் ஆறாமல் இருக்கும். இரத்தம் மெலிவதால், காயத்திலிருந்து இரத்தம் வர வாய்ப்புள்ளது.
- நீரிழிவு நோயாளிகள் பூண்டை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அதை அதிகமாக சாப்பிடுவது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் மிகவும் குறைத்து விடும். இது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனினும் அளவோடு உட்கொண்டால், அது சர்க்கரையை கட்டுப்படுத்து நன்மை பயக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.