திரும்பும் திசையெல்லாம் ராஜநாகங்களாக இருக்கும் கிராமம்.., இந்தியாவில் எங்கு உள்ளது?
இந்தியாவில் மொத்தம் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன.
உலகின் மிக நீளமான விஷப் பாம்பான ராஜ நாகம், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாம்புகள் சில கலாச்சாரங்களில் கடவுள்களைப் போல வணங்கப்படுகின்றன.
இந்தியாவில் நாகப்பாம்புகள் இந்து மதத்தின் முக்கியக் கடவுள்களான சிவன் மற்றும் விஷ்ணுவுடன் தொடர்புடையது.
என்னதான் கடவுள்களின் அம்சமாக இந்த விஷப்பாம்புகளை வழிபடபட்டாலும் ஆபத்தான உயிரினங்களில் இவை முக்கியமானதாகும்.
அந்தவகையில், இந்தியாவில் அதிக நாகப்பாம்புகள் உள்ள ஒரு ஆபத்தான இடம் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 அடி உயரத்தில் 3 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இந்த சிறிய அகும்பே கிராமம் அமைந்துள்ளது.
அகும்பே கிராமம் அடர்ந்த மழைக்காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிரமாண்டமான மலைகளால் சூழப்பட்டுள்ளது.
சுமார் 600 பேர் வசிக்கின்ற இந்த அகும்பே கிராமம் ராஜநாகத்தின் தாயகமாக விளங்குகிறது, மேலும் இது இப்பகுதியின் முதன்மையான இனமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |