என் அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க..திடீர் குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞர் விபரீத முடிவு
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர், தனது நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க
தூத்துக்குடியின் கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் சுரேஷ் (21). இவர் கல்லூரி விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் தனது நண்பர் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க...சந்தோசமா இருங்க... எல்லாரும் ஹாப்பியா இருங்க..." என்று இருந்துள்ளதைப் பார்த்து அவரது நண்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அவர் சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் சுரேஷ் வீட்டிற்கு பலரும் சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக
இதனையடுத்து சுரேஷ் உயிரிழந்தது உறுதியான நிலையில், தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டனர்.
பின்னர் சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் குறித்து தெரியாத நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |