ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 1,600 பேர்: காரணம் என்ன?
கடந்த ஆண்டு, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
அதாவது, 2024ஆம் ஆண்டு, 1,662 பேர், பெர்லின் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், மூன்று மாதங்களாகியும் தங்கள் விண்ணப்பங்கள் தொடர்பில் எந்த முடிவும் தெரியவரவில்லையானால், வழக்குத் தொடரலாம்.
காரணம் என்ன?
ஆக, தங்கள் தங்கள் விண்ணப்பங்களுக்கு பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலேயே 1,662 பேர், ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
பெர்லின் புலம்பெயர்தல் அலுவலகங்கள், அலுவலர்கள் பற்றாக்குறையாலும், ஏராளமான குடியுரிமை விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாலும், விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் திணறிவருகிறது.
எனவே ஃபெடரல் மட்டத்தில் இணையம் வாயிலாக இந்த பிரச்சினையை தீர்ப்பதென முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அது மொத்தத்தில் 40,000 விண்ணப்பங்கள் தேங்க காரணமாகிவிட்டது.
தற்போது வேகமாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தாலும், இன்னமும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவேண்டியுள்ளது.
ஆகவேதான், தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதை வேகப்படுத்துவதற்காக 1,662 பேர், ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |