அவரை ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்கறோம் பாரு! ஒரு வீரரை வாங்க போட்டி போடும் 3 அணிகள்?
ஸ்ரேயாஸ் ஐயரை தங்கள் அணிக்காக வாங்க பல முன்னணி அணிகள் ஏலத்தில் போட்டி போடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் 2015ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் முடிந்த கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். ஐபிஎல்லில் டெல்லி அணி வீரராக உள்ள ஸ்ரேயாஸ் மீண்டும் கேப்டன் பொறுப்பை எதிர்பார்க்கிறார். ஆனால் அடுத்த ஆண்டும் ரிஷப் பந்த் தான் கேப்டனாக இருப்பார் என கூறப்படுவதால் அதிருப்தியில் உள்ளார்.
இதனை உறுதிப் படுத்தும் வகையில் டெல்லி அணி ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரித்வி ஷா (7.50 கோடி), ஆன்ரிக் நோர்க்கியா (6.50 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மெகா ஏலத்தின்போது ஷ்ரேயஸ் ஐயரை வாங்க மூன்று அணிகள் கடும் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணியில் இருந்து ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டதோடு கோலியும் கேப்டன்சிக்கு குட்பை சொல்லிவிட்டார். இந்த இரண்டையும் ஸ்ரேயாஸ் நிரப்பலாம் என்பதால் அந்த அணி அவரை தட்டி தூக்க முயற்சிக்கும்.
சிஎஸ்கே அணியும் ஸ்ரேயாஸை வாங்க கடும் முயற்சி எடுக்கலாம். ஏனெனில் ரெய்னாவுக்கு மாற்றாக அவர் எடுக்கப்படலாம். மேலும் டோனி வருங்காலத்தில் ஓய்வு பெறும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்படலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஓபனர்கள் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் மட்டுமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில், கேப்டன் கே.எல்.ராகுல் ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறேன் என தெரிவித்துவிட்டதால், அந்த அணி அவரை தக்கவைக்கவில்லை. இதையடுத்து ஸ்ரேயாஸை அந்த அணி வாங்க முயலும்.