மூவரின் புகைப்படங்களுடன் அவசர எச்சரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்: 10,000 பவுண்டுகள் சன்மானம் அறிவிப்பு
பிரித்தானியாவின் Midlands பகுதியில் கொடூரமான படுகொலை தொடர்பாக தேடப்படும் மூவர் லண்டனில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அல்பேனிய நாட்டவர்கள்
தொடர்புடைய மூவரை கைது செய்யும் பொருட்டு உறுதியான தகவல் தெரிவிக்கும் நபருக்கு 10,000 பவுண்டுகள் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக தேடப்படும் அந்த மூவரும் அல்பேனிய நாட்டவர்கள் என்றும், கடந்த 2023 ஆகஸ்டு மாதம் Ben Daly என்ற 30 வயது நபரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த மூவரும் பதுங்கியிருக்கும் இடம் குறித்து தெரியவரும் பொதுமக்கள் ரகசியமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 வயதான Kevin Vucini, 21 வயதான Brigen Carrica ‘Qarrica’, மற்றும் 22 வயதான Rrezon Cengu ஆகிய மூவரையுமே அவசரமாக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
நேரிடையாக அணுக வேண்டாம்
சம்பவத்தன்று துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட Ben Daly உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.
Ben Daly கொலை வழக்கில் தொடர்புடைய மூவரும் எசெக்ஸ், லண்டன், செங்கு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எவரும் அவர்களை நேரிடையாக அணுக வேண்டாம் என்றும், அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து கைதுக்கு உதவும் நபருக்கு 10,000 பவுண்டுகள் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |