பிரான்சில் தீ விபத்தில் புலம்பெயர்ந்தோர் மூவர் பலி: எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
பிரான்சில் தீ விபத்து ஒன்றில் புலம்பெயர்ந்தோர் மூவர் பலியாகியுள்ள நிலையில், அவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பிரான்சிலுள்ள Marseille நகரில், காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்த மூவர் தீவிபத்து ஒன்றில் பலியாகியுள்ளார்கள்.
அத்துடன், இரண்டு வயது குழந்தை ஒன்றும், மற்றொருவரும் தீயில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர், காலியாக கிடந்த அந்த வீட்டில், வீட்டின் உரிமையாளரின் அனுமதியின்றி தங்கியிருந்துள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர், உயிரிழந்த மூவரும் முறையான ஆவணங்கள் இல்லாமல் பிரான்சில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தீப்பற்றியதற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ள பொலிசார், அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்துவோர் சந்திக்கும் வழக்கம் உண்டு என்றும், அதனால் அங்கு வாழும் மக்களுக்கும் இந்த கடத்தல்காரர்களுக்கும் பிரச்சினை ஏற்படுவதுண்டு என்றும் கூறியுள்ளனர்.