நாடாளுமன்றம் கூடியபோது மீண்டும் முதுகைக் காட்டிய செனட்டர்கள்
அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டியது பேசுபொருளானது.
அவுஸ்திரேலியாவில் வசந்தகால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் 'Acknowledgement of Country ' நிகழ்வின்போது, மூன்று One Nation செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டினர்.
ஒன் நேஷன் செனட்டர்கள்
அவுஸ்திரேலியாவின் செனட் சபையின் ஒவ்வொரு கூட்டத்தொடரும் 'Acknowledgement of Country' நிகழ்வுடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு the Lord's Prayer நடைபெறும். ஆனால், 'Acknowledgement of Country' மற்றும் 'Welcome to Country' ஆகிய சடங்குகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஒன் நேஷன் தலைவர் பவுலின் ஹான்சன் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அவரும், ஒன் நேஷன் உறுப்பினர்களும் 'Acknowledgement of Country' நிகழ்வின்போது முதுகைக் காட்டி நின்றனர்.
the Lord's Prayer-க்கு நகர்ந்தபோது
இந்த நிலையில், வசந்தகால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் நடைபெற்ற 'Acknowledgement of Country' நிகழ்வின்போது, மூன்று ஒன் நேஷன் (One Nation) செனட்டர்கள் தங்கள் முதுகைக் காட்டினர்.
துணை செனட் தலைவர் ஸ்லேட் ப்ராக்மேன் 'Acknowledgement of Country' நிகழ்வை ஆற்றியபோது, குயின்ஸ்லாந்து செனட்டர் மால்கம் ராபர்ட்ஸ், நியூ சவுத் வேல்ஸ் செனட்டர் சீன பெல் மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் டைரோன் விட்டன் ஆகியோர் முகத்தைத் திருப்பியிருந்தனர்.
அவர்கள், செனட் சபை the Lord's Prayer-க்கு நகர்ந்தபோது அந்த மூவரும் மீண்டும் திரும்பினர். அப்போது ஒன் நேஷன் தலைவரான பவுலின் ஹான்சன் (Pauline Hanson) சபையில் இல்லை.
கடந்த வாரம் பாடசாலைகள், அரசுத் துறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் 'Welcome to Country' விழாக்களை ரத்து செய்வதாக பவுலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |