பிரித்தானிய மக்களே எச்சரிக்கை! புதிதாக மருத்துவமனையில் உள்ள 126 பேரில் 3 பேர் மட்டுமே... சுகாதார செயலாளர் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவில் புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டிருக்கும் 126 பேரில் 3 பேர் மட்டும் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவில் அவசரகால நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது பிரித்தானியாவில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது.
இதனால் சமீப நாட்களாக குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை இப்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த 3-ஆம் திகதி நிலவரப்படி பிரித்தானியாவில் 12,383 பேர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
464 பேர் அவசர சிகிச்சையிலும், 126 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 126 பேரையும் சோதனை செய்ததில், அவர்களில் 3 பேர் மட்டுமே கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து சுகாதார செயலாளர் கூறுகையில், இப்போது தடுப்பூசி என்பது எவ்வுளவு முக்கிய என்பதை மக்கள் உணர வேண்டும். 126 பேரில் 3 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்புகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை உடைக்கிறது. கொரோனாவின் புதிய வழக்குகள் அதிகரித்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களாக உள்ளனர். அனுமதிக்கப்பட்டுள்ள, 126 பேரில், 83 பேர் போட்டுக் கொள்ளவில்லை. 28 பேர் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.
மூன்று பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி, டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.