ஜேர்மன் மனநல காப்பகத்தில் தங்கியிருந்த மூன்று பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்
ஜேர்மனியிலுள்ள மனநல காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த மூன்றுபேர் தீயில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
நேற்று முன்தினம், தெற்கு ஜேர்மனியிலுள்ள Reutlingen நகரில் அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது.
மூன்று பேர் பலி
அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பற்றிய தீயில் சிக்கி, 53 வயது பெண் ஒருவர், மற்றும் 73, 88 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் மேலும் 11 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு 57 வயதுடைய பெண்ணுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதனால் தீப்பற்றியது என்பது இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.