இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் 3 சாதனைகளை படைத்த வனிந்து ஹசரங்கா! குவியும் பாராட்டு
இந்தியாவக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டியில் இலங்கை சுழல் நட்சத்திரம் வனிந்து ஹசரங்கா 3 சாதனைகளை படைத்துள்ளார்.
கடைசி மற்றும் 3வது டி-20 போட்டியில் இந்தியாவை ஊதி தள்ளிய இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருததை இலங்கை சுழல் நட்சத்திரம் வனிந்து ஹசரங்கா தட்டிச்சென்றார்.
பிறந்தநாளான நேற்று 3வது டி-20 போட்டியில் களமிறங்கிய ஹசரங்கா, 4 ஓவர்கள் வீசி 9 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையை கிளப்பினார்.
இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் மட்டும் ஹசரங்கா 3 சாதனைகளை படைத்துள்ளதாக கிரிக்கெட் புள்ளிவிவர நிபுணர் மசார்ட் அர்ஷத் கூறியுள்ளார்.
அதாவது, டி-20 போட்டிகளில் பிறந்த நாளன்று சிறப்பாக பந்து வீசி வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
டி-20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி வீரர் மற்றும் இந்தியாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்களுக்கு குறைவாக கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் ஹசரங்கா படைத்துள்ளார்.
ஹசரங்காவின் பந்து வீச்சு திறமையை இலங்கை ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.