இரவில் தனியாக அமர்ந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த பெண்: வீடியோவில் கண்ட திடுக்கிடவைத்த காட்சி
பிரித்தானியாவில், இரவில் பிள்ளைகள் தூங்கியபிறகு, தனியாக அமர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்துகொண்டிருந்தார் ஒரு பெண்.
லிவர்பூலைச் சேர்ந்த Kayleigh Corby (33) என்னும் அந்த பெண், தான் பதிவு செய்த அந்த வீடியோவை தன் தோழி ஒருவருக்கு அனுப்ப, அவர் அந்த வீடியோவில் Kayleighக்குப் பின்னால் ஒரு உருவம் நிற்பதைக் கவனித்துள்ளார்.
உடனடியாக அவர் அந்த தகவலை Kayleighக்கு தெரிவிக்க, பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக இருந்த நிலையில், பயந்து போய், தன் பெற்றோரை மொபைலில் அழைத்து தகவலைச் சொல்லியிருக்கிறார் Kayleigh.
நள்ளிரவானாலும், உடனே மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடைய பாதுகாப்பு கருதி உடனே Kayleigh வீட்டுக்கு வந்துள்ளார்கள் அவரது பெற்றோர்.
அதற்குப் பிறகு Kayleigh பொலிசாருக்கு தகவலளித்தாரா, வீடியோவில் தோன்றிய நபர் யார், அவர் சிக்கினாரா என்பது போன்ற விடயங்கள் குறித்து Kayleigh விளக்கவில்லை.
வீடியோவை காண https://www.dailystar.co.uk/news/weird-news/woman-begs-parents-stay-after-23943878-
[EA8VE ]