இந்தியாவுக்கு பெருந்தொற்று காலக்கட்டத்தில் கை கொடுக்கும் டிம் குக்!
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கொரோனா தொற்று மீட்பு பணிகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுவதாவது, “கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ள அனைவருடன் ஆப்பிள் துணை நிற்கும்.
களத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான உதவிகளுக்கு ஆப்பிள் நன்கொடை வழங்கும்” என தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.