பெண் விவகாரத்தில் சிக்கியதால் கேப்டன் பதவியை உதறிய அவுஸ்திரேலியாவின் டிம் பெய்ன்! உடைந்து அழுதபடி பேசிய வார்த்தைகள்
பெண் விவகாரத்தில் சிக்கியுள்ள அவுஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி, பெண் ஒருவருக்கு தன் உடலை முழுதும் காட்டும் புகைப்படம் மற்றும் அதோடு சில பாலியல் ரீதியான தகாத வார்த்தைகளையும், உறவு கொள்ள அழைக்கும் ஆபாச வார்த்தைகளையும் மெசேஜாக சக பணியாளர் ஒருவருக்கு டிம் பெய்ன் 2017-ம் ஆண்டு அனுப்பியதாக புகார் எழ, வெளியில் அம்பலமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணையை மேற்கொண்டுள்ளது.
36 வயதாகும் டிம் பெய்ன் தற்போது மோசமான ஒரு புகாரையடுத்து தனது கேப்டன்சியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் கேப்டன்சியை ராஜினாமா செய்யும் முடிவுடன் செய்தியாளர்களை சந்தித்த போது உடைந்து அழுதுவிட்டார் டிம் பெய்ன்.
அவர் பேசுகையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை உதறுகிறேன், கடினமான முடிவு ஆனால் நான் ,என் குடும்பம், அவுஸ்திரேலியா கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சரியான முடிவு. 4 ஆண்டுகளுக்கு முன்பாக சக பணியாளர் ஒருவருக்கு அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ் தொடர்பாக ராஜினாமா செய்கிறேன்.
4 ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறக்கமிட்டி விசாரணையில் நான் முழுதும் ஒத்துழைப்பு அளித்தேன். அப்போது கிரிக்கெட் அவுஸ்திரேலியா நடத்தை விதிமுறைகளை நான் மீறவில்லை என்றே தீர்ப்பளித்தார்கள். ஆனால் இன்றளவிலும் கூட நான் இந்த செய்கைக்காக வருந்தி வருகிறேன்.
அப்போது என் மனைவி, குடும்பத்துடன் பேசினேன், அவர்கள் என்னை மன்னித்து விட்டது கடவுள் காட்டிய கருணை. விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனவே கேப்டன்சியை உதறுவது சரியான முடிவெடுத்து உடனடியாக விலகுகிறேன்.
ஆனால் நான் ஆஸ்திரேலிய அணியில் வீரராகத் தொடர விரும்புகிறேன். மிகபெரிய ஆஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி என தெரிவித்துள்ளார்.