தலைமுடி உதிர்வை தடுக்க வேண்டுமா? கேரட்டை இந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்திலே போதும்
முடி உதிர்வது என்பது ஒரு தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது.
காற்றில் மாசு, தண்ணீரில் பிரச்னை, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் பலருக்கும் முடி உதிர்வது அதிகமாகி வருகிறது.
இதனை ஒரு சில இயற்கை வழிகள் மூலம் சரி செய்ய முடியும். இதற்கு கேரட் பெரிதும் உதவுகின்றது.
இதனை பயன்படுத்தி எப்படி தலைமுடி உதிர்வை தடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கேரட் 1
- தேங்காய் பால் சிறிதளவு
- பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கேரட்டை தோல் சீவி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து பின் வடிகட்டி கேரட் சாறினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கேரட் ஜூஸுடன் சிறிதளவு தேங்காய் பால், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். கேரட் ஹேர் பேக்கினை நன்கு முடியின் வேர்கால்களில் படும்படி தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளளவும்.
பின்னர் ஷாம்புவினை பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி வலுப்பெற்று கூந்தல் அடர்த்தியாக வளரும்.