12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம்- தமிழக அரசு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 09.05.2025 அன்று வெளியாகும் என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது ஒரு நாள் முன்னரே மே 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இவையில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் தேர்விற்கு கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |