இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவச் சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு பயந்து சேலத்தில் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த மாணவி கனிமொழி, நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சினையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்றி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கோட்டுக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்கால் வளரச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்கிக்கையை வளர்த்திடக் கோருகிறேன்.
உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம், சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.
மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம் என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#NEET உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) September 14, 2021
மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன்.
சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம். pic.twitter.com/LrTocUP3he