மே மாதத்திலேயே ரூ.2000 வழங்கப்படும்! முதல்வரானவுடன் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய அரசாணைகள்!
தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்ற மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார்.
1, கொரோனா நிவராணமாக மே மாதத்திலேயே அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ரூ.2000 வழங்கப்படும்.
2, 16-05-2021 அன்று முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படும்.
3, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்யலாம்.
4, தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்கள்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல்.
5, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருததுவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதன்படி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து pic.twitter.com/67WvQxYFyH
— Stalin SP (@Stalin__SP) May 7, 2021