கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இந்த திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, மஞ்சள், கடுகு, மிளகாய் தூள், சோம்பு, குளியல் சோப்பு, துவைக்கும் சோப்பு என 13 பொருட்கள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கொரோனா நிவராணமாக மே மாதத்திலேயே அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது அதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் 15ம் திகதி முதல் ரூ.2000 வழங்கப்படும். கொரோனா நிவராணமாக அடுத்த மாதமும் தமிழக அரசு ரூ.2000 வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.