தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அறிவித்துள்ளார்.
கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 07-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு பற்றிய தமிழக அரசின் முழுமையான அறிவிப்பு:
— D Suresh Kumar (@dsureshkumar) June 5, 2021