தமிழக அமைச்சர் துரைமுருகனின் உடன்பிறந்த அண்ணன் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!
தமிழகத்தின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரைமுருகன் சகோதரர் மகள்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி (55) இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
பொலிஸ் விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.