உக்ரைனில் உள்ள தமிழர்களுக்கு அவசர கால உதவி தொலைபேசி எண்கள்: தமிழக அரசு வெளியீடு
உக்ரைனில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவும் விதமாக அவசரகால தொலைபேசி எண்களை வெளியீட்டு தமிழகத்தின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் கிழக்குப் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க், மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய இருபகுதிகளையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ரஷ்யா ஆதரவாளர்களுக்கு துணையாக தனது ராணுவத்தையும் புதின் அனுப்பிவைத்தார்.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பலநாடுகளும் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்ட அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகத்திற்கு தமிழக அரசு உதவும் என தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் தமிழர்கள் நாடுதிரும்ப உதவி தேவைப்பட்டால், தமிழக அரசை தொடர்புகொள்ளவதற்கு உதவி எண்ணைகளையும், இணையதள முகவரியையும் தமிழக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம் வெளிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள தமிழகர் உதவிக்கு தொடர்புகொள்ளவும்:
* 044-28515288
* 96000 23645
* 99402 56444
உதவிக்கான இணையதளம்:
www.nrtamils.tn.gov.in